அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் விபத்து-சாரதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதி-

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கழிவு மீன்களை ஏற்றி வந்த கூலர் வாகனம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை மன்னார் பிரதான பாலத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது காயமடைந்த குறித்த வாகனத்தின் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (20) இரவு மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி குறித்த கூலர் வாகனம் பயணித்துள்ளது.

குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த மீன் கழிவுகள் கோழித்தீக் தாயரிப்பதற்காக மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் கையில் கொண்டு வரப்பட்டதாக தெரிய வருகின்றது.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தீனுடாக பயணித்த குறித்த கூலர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகாமையில் காணப்பட்ட சுமார் 5 தடைகளை உடைத்து வீதியை வீட்டு பாய்ந்து மீண்டும் வந்த திசையை நோக்கி தலைகீழாக பிறண்டுள்ளது.

இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கூலர் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





மன்னார் பிரதான பாலத்தில் விபத்து-சாரதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதி- Reviewed by Author on January 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.