அண்மைய செய்திகள்

recent
-

மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் தேசிய தாய்மொழி தின விழிப்புணர்வு பேரணி-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் 03ம் தடவையாகவும் தாய்மொழிதினமான 21-02-2020 ஆண்டுக்கான தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் ஜனாப் M.Y.மாஹிர் அவர்களின் வழிநடத்தடலில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து இன்று 24-02-2020 திங்கட்கிழமை காலை தேசிய தாய்மொழிதினவிழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமானது.


மாணவர்கள் தேசியக்கொடி மற்றும் பாடசாலைக்கொடிகளினை ஏந்தியவாறு தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புக்களினை உரத்தக்குரலில் கவிவடிவில் எடுத்தியம்பியவாறு மன்னார் மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் நகரசபை கல்விப்பணிமனை கமநலசேவைகள் திணைக்களம்சென்று

மேலதிக அரசாங்க அதிபர் திருS.குணபாலன் செயலாளர் திரு.பிரதீப் நகரசபைச்செயலாளர் திரு.X.L.பிறிட்டோ மற்றும் முதல்வர் திரு.A.அன்ரனி டேவிட்சன் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி I.இவோன் மற்றும் திருமதி.வாசுகி கமலசேவைகள் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் மாணவர்களின் இச்செயற்பாடானது மிகவும் பாராட்டுக்குரியது .

தொடர்ச்சியாக 03வது வருடமாக இவ்வாறான விழிப்புணர்வு பேரணியை நாடாத்துவதன் மூலம் தமிழ்மொழிமீதான பற்றினையும் ஆர்வத்தினையும் தூண்டுவதோடு அந்நியமொழியினை விட அன்னைமொழியின் அவசியம்புரியும் படிசெய்யும் இச்செயற்பாட்டுக்கு என்றும் நாங்கள் துணையிருப்போம் என்றனர் மாணவர்களையும் பாடசாலைச்சமூகத்தினையும் வெகுவாகப்பாராட்டினர்.





















மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் தேசிய தாய்மொழி தின விழிப்புணர்வு பேரணி-படங்கள் Reviewed by Author on February 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.