அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸால் இத்தாலியில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!


இத்தாலியில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 133 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் பிராந்தியமான லோம்பார்டியில் மிக மோசமான அளவிற்கு கொரோனா வெடிப்பு உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை நிலவரப்படி கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக இருந்தது. ஆனால் இன்று ஒரே நாளில் 366 ஆக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,883 இலிருந்து 25% உயர்ந்து 7,375 ஆக அதிகரித்துள்ளது என்று சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய நாளில், நாடு முழுவதும் பள்ளிகள், ஜிம்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகள் மற்றும் பிற இடங்களை மூடுவதாக பிரதமர் கியூசெப் கோன்டே அறிவிப்பு வெளியிட்டார்.
இத்தகைய தீவிர நடவடிக்கைகள் ஏப்ரல் 3 வரை நீடிக்கும் எனவும் கூறியிருந்தார்.

கொரோனா வைரஸால் இத்தாலியில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! Reviewed by Author on March 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.