அண்மைய செய்திகள்

recent
-

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த 11 உணவுகளை சாப்பிட்டாலே போதும்! -


பொதுவாக சில பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது தங்கள் அழகை கெடுத்தவிடும் என்று எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றார்கள். இது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடுகின்றது.
உண்மையில் தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பது தாய்க்கும் சேய்க்கு நல்லது என நமது பெரியவர்கள் கூறுவதுண்டு.

அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.
அந்தவகையில் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் சில உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
  • ஒரு நாளில் 8 கிளாஸ் அளவு தண்ணீர் உடலுக்கு போதுமானது. தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்பக்கட்டங்களில் நிறைய தண்ணீர் குடித்தால் அவசியம்.
  • காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ்க்கு பால் சுரப்பிகளைத் தூண்டுகின்ற தன்மை உண்டு. அதனால் பாலூட்டும் தாய்மார்கள் காலை உணவாக ஓட்ஸை சில பாதாம் மற்றும் நட்ஸ், பழங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
  • தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிக்க பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பூண்டு சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • கேரட்டை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஜூஸாக எடுத்து, சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது. மதிய உணவில் கேரட்டை பொரியலாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
  • சமையலில் எந்த விதத்தில் சோம்பு சேர்த்துக் கொண்டாலும் அது பால் சுரப்பை மேம்படுத்துகிறது. பால் சுரப்பிகளைத் தூண்டும் ஆற்றலும் சோம்புக்கு உண்டு. இதனை வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதற்கு பதிலாக சோம்பை அதில் போட்டு, சோம்புத் தண்ணீராக குடித்து வந்தால் இரட்டிப்புப் பயன் கிடைக்கும்.
  • ஒரு கைப்பிடி நட்ஸ் எடுத்து அவ்வப்போது சிற்றுண்டியாக உட்கொள்வதால் பால் சுரப்பு அதிகரிக்கும். முந்திரி, பாதாம், போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும். பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, வால்நட் ஆகிய நட்ஸ் மற்றும் உலர் பழங்களை எடுத்துக் கொள்வது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கும்.
  • பப்பாளி காய் ஒரு சிறந்த பால் சுரப்பு ஊக்கியாக செயல்புரிகிறது . பப்பாளி காயை சாலட் செய்து உட்கொள்ளலாம் அல்லது வேகவைத்து பொரியல் செய்து உட்கொள்ளலாம்.
  • எள்ளு விதைகள் கொண்டு தயாரிக்கப்படும் தாஹினி என்ற உணவு வகை பால் சுரப்பை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த உணவுப்பொருள் ஆகும். எள்ளு விதைகள் கொண்டு இனிப்பு தயாரித்து உட்கொள்ளலாம். எள்ளு விதைகள் சுவையில் சிறந்தது மட்டுமல்ல, கால்சியம் அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.
  • பால் சுரப்பை அதிகரிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய உணவுப்பொருள் இஞ்சி. இதனை எடுத்து கொள்வது நல்லது.
  • கிழங்கான் மீன் பால் சுரப்பை ஊக்குவிக்கும் . இது மட்டுமில்லாமல் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் DHA போன்றவை இந்த மீனில் அதிகம் உள்ளது.
  • பால் சுறா என்னும் ஒரு வகை கருவாடு பால் உற்பத்தியை அதிகரிக்குமாம். இதனை தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் எடுத்து கொள்வது நல்லது.

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த 11 உணவுகளை சாப்பிட்டாலே போதும்! - Reviewed by Author on March 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.