2020-ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை பாதியாக குறைப்பு...முதல் பரிசு எவ்வளவு தெரியுமா...
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடருக்கு ஒரு தனி வரவேற்பு உள்ளது.
இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளும் இதே போன்று வீரர்களை தெரிவு செய்து டி20 தொடரை நடத்தி வருகின்றன. ஆனால் ஐபிஎல் தொடர் போன்று மற்ற நாடுகளில் அந்தளவிற்கு வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
அதிக விலைக்கு வீரர்கள் வாங்கப்படுவதால், பணம் கொட்டும் ஒரு விளையாட்டாக இந்தியாவில் ஐபிஎல் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்த் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் பரிசுகளில் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளதாகவும், இது குறித்து ஐபிஎல் அணியின் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், வரும் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடக்க விழாவை நடத்தப்போவதில்லை என்று வாரியம் குறிப்பிட்டுள்ளது. இந்த சீசனில் பிளே-ஆப் செய்வதற்கான நிலையான நிதியும் குறைக்கப்படும்.
அதோடு, ஐபிஎல் 2020-ஆம் ஆண்டின் வெற்றியாளரின் பரிசுத் தொகை 20 கோடி ரூபாயிலிருந்து 10 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரன்னர் அப்பிற்கு, அதாவது இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 6.25 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகள் (முறையே தகுதி 2 பிளேஆப் போட்டியை இழந்தவர் மற்றும் எலிமினேட்டர் பிளே-ஆப் போட்டியை இழந்தவர்) 8.75 கோடிக்கு பதிலாக தலா 4.375 கோடி ரூபாய் கொடுக்கப்படும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு 20 கோடி ரூபாயும், தோல்வியடைந்த அணிக்கு 12.5 கோடி ரூபாயும், மூன்றாவது மற்றும் நான்காம் இடம் பிடித்த அணிக்கு 8.75 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2020-ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை பாதியாக குறைப்பு...முதல் பரிசு எவ்வளவு தெரியுமா...
Reviewed by Author
on
March 04, 2020
Rating:
No comments:
Post a Comment