அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மரக்கறி வியாபார நடவடிக்கைக்கு வழங்கப்படும் பாஸ் நடைமுறை தொடர்பில் ஆராயப்பட வேண்டும்- நிரந்தரமாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிப்பு.....

மன்னார் மாவட்டத்தில் மரக்கறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாத பலருக்கு மரக்கறி பொருட்களை மன்னாரிற்கு கொண்டு வற்து விற்பனை செய்ய அதிகாரிகள் பாஸ் வழங்கியுள்ளதாகவும்,இதனால் மன்னார் மாவட்டத்தில் நிறந்தரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பாதீக்கப்பட்டு வருவதாக மன்னாரில் நிறந்தரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்டு வரும் நிறந்தரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் கருத்து தெரிவிக்கையில்,,,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையினை கருத்தில் கொண்டு காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற போது மக்களுக்கு மரக்கறி வியாபரங்களை மேற்கொள்ள மன்னாரில் நிறந்தரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களுக்கு உரிய நடைமுறைப்படி போக்குவரத்து பாஸ் நடைமுறை பொலிஸாரினால் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் தற்போது மன்னார் மாவட்டத்தில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளாமல் வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலருக்கு அதிகாரிகள் ஊடாக பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னாரில் நிறந்தரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் பாதீக்கப்பட்டு வருகின்றனர்.எனவே விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றது.

எனவே பாஸ் வழங்குவது குறித்து உரிய அதிகாரிகள் தீவிர விசாரனைகளின் பின்னர் மன்னாரில் நிறந்தரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் பாதீக்காத வகையில் பாஸ் நடைமுறையினை அமுல் படுத்த வேண்டும் எனவும்,குறித்த விடையத்தில் பிரதேச செயலாளர்கள்,அரசாங்க அதிபர்,பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னாரில் நிறந்தரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.




மன்னாரில் மரக்கறி வியாபார நடவடிக்கைக்கு வழங்கப்படும் பாஸ் நடைமுறை தொடர்பில் ஆராயப்பட வேண்டும்- நிரந்தரமாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிப்பு..... Reviewed by Author on March 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.