அண்மைய செய்திகள்

recent
-

2020 டி-20 உலகக் கோப்பை நடக்கும் ஐசிசி தகவல் -


கொரோனாவால் உலகம் முழுவதும் கிரிக்கெட் உட்பட விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் 2020 டி-20 உலகக் கோப்பை தொடர் நடக்குமா என்பது குறித்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக உலகளவில் அனைத்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்த சர்வதே கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.
வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நாடுகளில் உள்ளுர் கிரிக்கெட் போட்டி தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பை தொடர் குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில், ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரின் உள்ளுர் ஒருங்கிணைப்புக் குழு நிலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

2020 அக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் நவம்பர் 15ம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் 8 மைதானங்களில் டி-20 உலகக் கோப்பை தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட படி தொரை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இச்செய்தி உலகெங்கிலும் உள்ள டி-20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

2020 டி-20 உலகக் கோப்பை நடக்கும் ஐசிசி தகவல் - Reviewed by Author on March 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.