அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா அச்சம்...‘குகையிலே தங்குங்கள் சென்னை சிங்கங்களே’..! சிஎஸ்கே வேண்டுகோள் -

கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 22ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி முதல் நாட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரவி வருவதால் ரசிகர்கள் இந்த வார இறுதியில் குகையிலே (வீட்டிற்குள்ளே) தங்க வேண்டும். உங்களையும் சுற்றியுள்ள வயதான நபர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
வைரஸுக்கு வாழ்க்கையை கடினமாக்குவோம். விசில் அடித்து வைரஸுக்கு எதிராக இடைவிடாத போராடும் போராளிகளுக்கு நன்றியைத் தெரிவிப்போம்.

கொரோனா அச்சம்...‘குகையிலே தங்குங்கள் சென்னை சிங்கங்களே’..! சிஎஸ்கே வேண்டுகோள் - Reviewed by Author on March 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.