அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2குடும்பங்களுக்கு கொரோனா பரிசோதனை.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த புதன் கிழமை(8) அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு குடும்பங்கள் 10-04-2020  வெள்ளிக்கிழமை காலை கொரோனா பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்  வெள்ளிக்கிழமை10-04-2020  காலை குறித்த கிராமத்தில் உள்ள இரு விடுகளுக்கும் சென்று தனிமைப்படுத்தப்பட்ட குறித்த இரு வீடுகளிலும் உள்ள 08 உறுப்பினர்களுக்கு கொரோனா சமூதாய பரிசோதனைகளை மேற்கொண்டார்.

மேலும் பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார துறை பணியாளர்களும் குறித்த வீடுகளுக்கு சென்றதோடு,கிருமி நீக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

மேலும் தாராபுரம் கிராமத்தை சுற்றி இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளை சேர்ந்த 464 குடும்பங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2குடும்பங்களுக்கு கொரோனா பரிசோதனை. Reviewed by Author on April 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.