அண்மைய செய்திகள்

recent
-

மக்களாகிய நீங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி படுத்திக்கொள்ளுங்கள்-மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன்.

காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்படுகின்ற காரணத்தினால் மக்களாகிய நீங்கள் உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி படுத்திக்கொள்ளுங்கள் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை 19-04-2020 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

உருவம் தெரியாத உயிர்க்கொல்லி 'கொரோனா' வைரஸின் தாக்கம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவகையிலே இன்று வரை குறித்த தாக்கம் ஏற்படவில்லை.

தற்போது காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்படுகின்ற காரணத்தினால் மக்களாகிய நீங்கள் உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.

சமூக இடை வெளிகளை பின் பற்றி முகக் கவசம் அணிந்து வெளியில் நடமாடுவது நன்று.

குறிப்பாக மக்கள் சுகாதார நடை முறைகளை பின் பற்றி உங்களின் பாதுகாப்புக்களை நீங்களே உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களாகிய நீங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி படுத்திக்கொள்ளுங்கள்-மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன். Reviewed by Author on April 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.