அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை பிரிவில் மக்கள் தமது வீடுகளில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்க விசேட நடவடிக்கை.

மன்னார் நகர சபை பிரிவில் உள்ள மக்கள் தமது வீடுகளில் உள்ள திண்மக் கழிவுகளை பிரித்து வழங்குவதற்கான நிற வாளிகள் திங்கட்கிழமை 20-04-2020 விநியோகிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மன்னார் நகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

மன்னார் நகர சபை பிரிவில் உள்ள மக்கள் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி மன்னார் நகர சபையின் இரண்டு நிற வாளிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு நிற வாளியில் உக்காத கழிவு பொருட்களையும்,மற்றைய நிற வாளியில் உக்கக்கூடிய கழிவு பொருட்களையும் சேமிக்க முடியும்.

மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் திண்மக்கழிவு பொருட்களை வீடுகளில் பெற்றுக்கொள்ள வருகின்ற போது தரம் பிரித்தே வழங்க வேண்டும் என மன்னார் நகர சபையின் தலைவர் தெரிவித்தார்.



மன்னார் நகர சபை பிரிவில் மக்கள் தமது வீடுகளில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்க விசேட நடவடிக்கை. Reviewed by Author on April 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.