அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

கொரோன அச்சம் காரணமாக தற்காலிகமாக சேவையை இடை நிறுத்தியிருந்த மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கஸ்ரமான சூழ்நிலைகளிலும் மக்களுடைய மனித உரிமை மீறல் தொடர்பான பிரசைனைகளை தீர்த்துவைப்பதற்காக மேற்படி மனித உரிமை ஆணைகுழு உபகாரியாலயம் தமது சேவையை ஆரம்பித்துள்ளது.

 அந்த வகையில் உப காரியாலயத்திற்கு என முறைப்பாடுகள் செய்ய வரும் மக்கள் அனாவசியமாக வகையில் அதிகளவானவர்கள் அழைத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளதுடன்  முறைப்பாடுகளுடம் சம்பந்தப்பட்ட நபர்கள் மாத்திரமே வருகை தரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 அதேநேரத்தில் காரியாலயத்திற்கு வருகை தருபவர்கள் அரசினுடைய அறிவுத்திறனை பின்பற்றறி சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் முக கவசங்கள் அணிந்துவருவது கட்டயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் இயலுமானவரை தங்களுடைய முறைப்பாடுகளை 0233123906 என்ற தொலைபேசி என்னின் ஊடாக அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் அதே நேரத்தில் hrcmannarsub@gmail.com வழியாகவும் தங்களுடைய முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என மன்னார் மாவட்ட  உப காரியாலயத்தின் பொறுப்பதிகாரி சட்டத்தரணி வசந்தராஜாவால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் Reviewed by Author on April 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.