அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச்சங்கமும் தேசியசமாதான பேரவையும் உலர் உணவுபொதிகள்-படங்கள்


தேசியசமாதான பேரவையும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச்சங்கமும் இணைந்து தமது உறுப்பினர்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கியமை
கடந்த 24.04.2020ம் திகதி தேசியசமாதானபேரவையும்,ம.து.ம.ச இணைந்து நடமாடும் சேவையின் மூலம் மாற்றாற்றல் உறுப்பினர்களுக்கும்,பெண்கள் குழுக்கள்உள்ளடக்கலாக 43 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் முசலி,நானாட்டான்,முருங்கன, அடம்பன்,பள்ளமடு,எருக்கலம்பிட்டி,கரிசல, மன்னார் போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டது.
 
இதன்; போதுமன்னார் தேசியசமாதானபேரவையின் குழு சார்பில் ம.து.ம.சதலைவர் வண.பிதா.தி.நவரெட்ணம்,வண.விமலரெட்ணதேரோ–சாந்திபுரம்,அருட்சகோதரி ரூபராணி,செல்வி.சாந்தி கஸ்மீர் சமாதான பேரவை இணைப்பாளர் திரு.மெடோசன்,சமாதானபேரவை ம.து.ம.ச இணைப்பாளர் திரு.சின்கிலேயர் பீற்றர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 கொழும்பு சமாதான பேரவையின் தலைவர் கலாநிதிதிரு.ஜெகன் பெரரா அவர்களுக்குகடந்த ஒருவருட காலமாக ம.து.ம.ச நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தினை முன்னேடுத்தமைக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து MARR/NPC கருத்துதெரிவிக்கையில் வைகாசிமாதத்திலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் இயங்கி வருகின்ற மாவட்ட சர்வமத குழுவின் கூட்டங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்துவது எனவும் புதிய  உறுப்பினர்களை இணைந்துகொள்வதும் என தெரிவிக்கப்பட்டது.

தகவல்
திரு.சின்கிலேயர் பீற்றர்
இணைப்பாளர் - தேசியசமாதானபேரவை














மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச்சங்கமும் தேசியசமாதான பேரவையும் உலர் உணவுபொதிகள்-படங்கள் Reviewed by Author on April 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.