அண்மைய செய்திகள்

recent
-

வாழ்வாதாரத்தை இழந்த விக்ணேஸ்வரன- காரணம் இன்றி கலைந்து சென்ற தேனீக்கள்

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட எருவிட்டான் பகுதியை சேர்ந்தவர் விக்ணேஸ்வரன் கடந்த வருடம் மன்னார் விவசாய திணைக்களத்தினால் சிறந்த வீட்டு தோட்ட செய்கையாளர் மற்றும் சிறந்த தேனீ வளர்பாளர் விருதை பெற்றவர்.

தனது வீட்டை சூழவுள்ள சிறிய அளவிலான காணியை சுத்தப்படுத்தி வீட்டு தோட்ட செய்கை கால்நடைவளர்புடன் முக்கியமாக தேனி வளர்பில்  கடந்த இரண்டு வருடங்கலுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றார்.

வீட்டு தோட்டம் மற்றும் கால் நடை வளர்ப்பு தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் சிறிய அளவிலான இலாபத்தை கொண்டு விக்னேஸ்வரன் தனது குடும்பத்தின் அத்தியாவசிய சேவையை பூர்த்தி செய்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் என வளர்பில் இருந்த அதிகளவான தேனீக்கல் கலைந்து சென்றுள்ளது நான்கு மாத காத்திருப்பின் பின் இனும் ஒரு சில வாரங்களில் தேன் வதைகளில் இருந்து தேனை சேகரிக்க காத்திருந்த நிலையில் சுமார் 10 க்கு மேற்பட்ட பெட்டிகளில் இருந்த தேனிக்கள் கலைந்து சென்றுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் என்ன செய்வது என அறியமால் குறித்த விவசாயி கவலை அடைந்துள்ளார்.

கோரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக அனைத்து விதமாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தேனீக்கலும் கலைந்து சென்றமையினால் அனைத்தையும் இழந்த நிலையில் தற்போது மீண்டு வர முடியாத நிலையில் உள்ள தான் எஞ்சிய வதைகளை வைத்து தற்போது மெழுகு மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் எனவும் இவ் சூழ்நிலையில் மெழுகை வாங்கவும் யாரும் இல்லை என கவலை தெரிவிக்கின்றார் எனவே உதவ முடிந்த அதிகாரிகள் உதவி செய்து தனது வாழ்வாதாரத்தை கட்டியொழுப்ப உதவு மாறு விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


வாழ்வாதாரத்தை இழந்த விக்ணேஸ்வரன- காரணம் இன்றி கலைந்து சென்ற தேனீக்கள் Reviewed by Author on April 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.