மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுகாதார பொருட்கள் பகிர்ந்து வழங்கி வைப்பு.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மன்னார் மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறுவர் பராமறிப்பு நிலையங்களுக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுகாதார மற்றும் இதர பொருட்கள் இன்றைய தினம் பகிர்ந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் குறித்த சுகாதார மற்றும் இதர பொருட்களை கையளித்தனர்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் குறித்த நிறுவனம் பல்வேறு மனிதாவிமான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(22-05-2020)
இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் குறித்த சுகாதார மற்றும் இதர பொருட்களை கையளித்தனர்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் குறித்த நிறுவனம் பல்வேறு மனிதாவிமான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(22-05-2020)
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுகாதார பொருட்கள் பகிர்ந்து வழங்கி வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
May 22, 2020
Rating:
No comments:
Post a Comment