அண்மைய செய்திகள்

recent
-

தீயனைப்புச் சேவை மன்னார் மாவட்டத்திற்கு உடனடியாக பெறப்பட வேண்டும்- இந்துக் குருமார் பேரவை வேண்டுகோள்

தீயனைப்புச் சேவை மன்னார் மாவட்டத்திற்கு உடனடியாக பெறப்பட வேண்டும் மன்னார் இந்துக் குருமார் பேரவை  மன்னார் அரசாங்க அதிபருக்கும் மன்னார் நகர சபை முதல்வருக்கும்  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கடித்ததில்

தீயனைப்புச் சேவை மன்னார் மாவட்டத்திற்கு இது வரை இல்லை இதலால் மன்னார் மாவட்டத்தில் தீப்பரவல் ஏற்படுகின்ற போது பெரும் அழிவினை மன்னார் மாவட்டம் பலவருட காலமாக சந்தித்து வருகின்றது இவ் விடயம் தொடர்பாக பலர் பல.காலத்திலும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையிலும் இதற்கான தேவை பல காலமாக உணரப்பட்ட போதுதிலும் இதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் எந்த தீர்வும் தீயணைப்பு துறை சார் செயல்பாடும் இதுவரை மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை என்பது தூரதிஸ்ரமே எனவே இவ் விடயத்தினை கவனத்தில் கொண்டு மன்னாருக்கான தீயனைப்பு சேவை வசதியை பெற்று தர உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறு மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக மன்னார் இந்துக் குருமார் பேரவை வேண்டுககோள் விடுத்துள்ளது.


தீயனைப்புச் சேவை மன்னார் மாவட்டத்திற்கு உடனடியாக பெறப்பட வேண்டும்- இந்துக் குருமார் பேரவை வேண்டுகோள் Reviewed by Author on May 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.