அண்மைய செய்திகள்

recent
-

லக்ஸ்மி கரங்கள்தொண்டு நிறுவனத்தால் ஐந்தாம் கட்டமாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு பணம் வழங்கி வைப்பு

இன்று (18-05-2020) “லக்ஸ்மி கரங்கள் லண்டன் “தாயக மக்களின்தொண்டு நிறுவனத்தால் ஐந்தாம் கட்டமாக மன்னார் மாவட்டத்திலுள்ள நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உள்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் தமது இயல்பு வாழ்விற்கு திரும்பாத மிகவும் நலிவடைந்த குடும்பங்கள் 50 இணை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திறகும் தலா 1500/- படி நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் உயர்திரு . மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்களின் தலைமையில் அவர்களின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது


 இந் நிகழ்விற்கு நானாட்டான் பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு. அ. விமலேந்திரக்குமார் உள்பட பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் தொடர்புடைய கிராம உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இந்நிகழ்வினை லக்ஸ்மி கரங்கள் சார்பில் அதன் இணைப்பாளர் திரு.குலநாயகம் அவர்களும் திரு. சி.சிறி GS அவர்களும் நெறிப்படுத்தியிருந்தார்கள்

 .தொடர்ச்சியான “லக்ஸ்மி கரங்களின்” மனித நேயப்பணியில் இந்நிகழ்விற்கான நிதியினை மன்னார் அடம்பன் ஆள்காட்டிவெளியை சொந்த இடமாகவும் புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் கரம் பற்றிக்கொண்டார் அன்பார்ந்த புலம்பபெயர் உறவுகளே... கொரோனா பாதிப்பில் உங்களின் தொழில்வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்தும் தாயக மக்களின் வாழ்வுக்காக

“ லகஸ்மி கரங்களின்” கரங்களை பற்றிக்கொண்டு உதவுகின்றீர்கள் உங்களின் பங்களிப்புக்கள் அனைத்தும் உரியவர்களுக்கு லக்ஸ்மி கரங்களின் ஊடாக சென்றடைகின்றது உங்கள் அனைவருக்கும் நானாட்டான் பிரதேச செயலாளர் சார்பான நிறைவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.





லக்ஸ்மி கரங்கள்தொண்டு நிறுவனத்தால் ஐந்தாம் கட்டமாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு பணம் வழங்கி வைப்பு Reviewed by Admin on May 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.