அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற இலவச நடமாடும் மருத்துவ முகாம்-PHOTO


நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. -இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்ள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 


இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், கள்ளியடி உள்ளிட்ட அயல் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஜீ. குணசீலன் தலைமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலுப்பைக்கடவை கலாச்சார மண்டபத்தில் குறித்த இலவச நடமாடும் வைத்திய முகாம் நடை பெற்றது. குறித்த நடமாடும் வைத்திய முகாமில் இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், கள்ளியடி உள்ளிட்ட அயல் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து பொருட்களை பெற்றுக் கொண்டனர். 

 குறித்த நடமாடும் வைத்திய முகாமில் கலந்து கொண்ட மக்கள் சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியில் வரிசையாக அமர்ந்து இருந்து மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். கடந்த வாரம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக இலவச நடமாடும் முகாம் இடம் பெற்று வந்த நிலையில் 5 ஆவது கட்டமாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை பகுதியில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்ற இலவச நடமாடும் மருத்துவ முகாம்-PHOTO Reviewed by Author on May 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.