அண்மைய செய்திகள்

recent
-

நியூ மன்னார் இணையம் ஊடாக"தெய்வமணி அறக்கட்டளை' மன்னார் நகர முதல்வரிடம் ஒரு தொகுதி முகக்கவசங்கள் கையளிப்பு.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்,அரச தனியார் அலுவலகங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளது.

எனினும் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை பின் பற்றி அனைவரையும் கடமையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் நகர சபையில் கடமையாற்றும் பணியாளர்கள், மற்றும் சுத்திகரிப்பு பணியாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு  நியூ மன்னார் இணையம் ஊடாக  'தெய்வமணி அறக்கட்டளை' இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு தொகுதி முகக்கவசம் கையளிக்கப்பட்டது.

'தெய்வமணி அறக்கட்டளை' யின் பிரதி நிதி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் நகர சபையில் வைத்து மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ஆகியோரிடம் குறித்த முகக்கவசங்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


(மன்னார் நிருபர்)
(17-05-2020)





நியூ மன்னார் இணையம் ஊடாக"தெய்வமணி அறக்கட்டளை' மன்னார் நகர முதல்வரிடம் ஒரு தொகுதி முகக்கவசங்கள் கையளிப்பு. Reviewed by NEWMANNAR on May 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.