தமிழ் மக்களுக்காக உறுதியோடு செயல் படக்கூடிய புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.....
தமிழ் மக்கள் எங்களுக்கு வழங்குகின்ற ஆதரவின் ஊடாக
நிச்சையமாக நாங்கள் இந்த தேர்தலில் அதிக பட்டமான ஆசனங்களை பெற்று
இத்தேர்தலுக்கு பிற்பாடு நீண்ட காலமாக தீர்க்கப் படாமல் இருக்கின்ற எமது
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற அணைத்து முயற்சிகளையும்
மேற்கொள்வோம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட
வேட்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன்
தெரிவித்தார்.
-மன்னாரில்
இன்று புதன் கிழமை (8) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
எதிர்
வரும் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து வடக்கு-கிழக்கில் 'தமிழ் மக்கள் தேசிய
கூட்டணிக்கான' மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது.
அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலுடன் ஒட்டி தமிழ் மக்கள் நூற்றிற்கு றூறு வீதம் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
நீண்ட
காலமாக தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய இந்த
பிரச்சினையை எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு
உறுதியான ஒரு ஒரு நேர்மையான அரசியல் தலைமையும், அரசியல் வெற்றிடமும் நீண்ட
காலமாக ஏற்பட்டுள்ளது.
நீண்ட
காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிவர்த்தி செய்யும் வகையில்
'தமிழ் மக்கள் தேசிய கூட்டணி' அதனுடைய தலைவராக இருக்கக் கூடிய விக்னேஸ்வரன்
தலைமையில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில்
'தமிழ் மக்கள் தேசிய கூட்டணி' அதிகலவான ஆசனங்களை பெற்றுக் கொள்வோம்.
கடந்த
ஒரு மாதங்களுக்கு மேலாக நாங்கள் மக்கள் மத்தியில் சென்ற இடத்தில் மக்கள்
எங்களுக்கு வழங்குகின்ற ஆதரவின் ஊடாக நிச்சையமாக நாங்கள் இந்த தேர்தலில்
அதிக பட்டமான ஆசனங்களை பெற்று இத்தேர்தலுக்கு பிற்பாடு நீண்ட காலமாக
தீர்க்கப் படாமல் இருக்கின்ற எமது மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு
காணுகின்ற அணைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
இத்தேர்தல் காலத்தில் அரசாங்கம் அரசு சார்பற்ற கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களும் இத்தேர்தலில் இறக்கி உள்ளனர்.
எனவே
பொது மக்கள் சுயேட்சைக் குழுக்களுக்கும், அரசாங்கத்திற்கும், அரசு சார்பாக
இருக்கின்றவர்களுக்கும் எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது
வாக்களிப்பதை தவிர்த்து எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்கான உறுதி மிக்க
தலைமைத் துவத்தை கொண்டு வரும் வகையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மீன்
சின்னத்தை ஆதரிக்கும் படி மக்களுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை
முன் வைத்துள்ளோம்.
-தமிழ் மக்கள் நிச்சையமாக ஆணையை எமக்கும் வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
எங்களுக்கு
எம் மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.மேலும் தமிழ் மக்களினுடைய
வாக்குகளை சூரையாடும் வகையில் அரசும்,அரசு சார்பான கட்சிகளும் சுயேட்சைக்
குழுக்களும் மக்கள் மத்தியில் தாங்கள் பாரிய அளவில் அபிவிருத்திகளை செய்ய
உள்ளதாகவும்,அதற்காக வாக்களிக்கும் படியும் தமிழ் மக்கள் மத்தியில்
இருக்கக் கூடிய மத முறன் பாடுகளையும், சமூக முறண்பாடுகளையும் தூண்டி விட்டு
வாக்குகளை சூரையாடுவதற்கான பல முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது.எனவே
தமிழ் மக்கள் மிகவும் தெழிவாகவும், விழிர்ப்பாகவும் இருக்க வேண்டிய ஒரு
தேவைப்பாடு உள்ளது.
கடந்த
காலத்தில் ஒரு உறுதியற்ற, அரசிற்கு ஆதரவு வழங்குகின்ற தமிழ்த் தலைமைகளை
தெரிவு செய்யாமல் தமிழ் மக்களுக்காக உறுதியோடு செயல் படக்கூடிய புதிய
மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.என அவர்
மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்காக உறுதியோடு செயல் படக்கூடிய புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.....
Reviewed by Author
on
July 08, 2020
Rating:
No comments:
Post a Comment