அண்மைய செய்திகள்

recent
-

2011உலகக்கிண்ண இறுதிப் போட்டி தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த...........

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மோசடிகள் குறித்து ஆராயும் குழுவில் நேற்று முன்னிலையாகியிருந்தார்...

2011 உலகக்கிண்ண போட்டி இடம்பெற்றபோது தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வாவிற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு விளையாட்டில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராயும் குழுவில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக ஜூன் 18 அன்று முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்....

இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது....

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜூன் 24 அன்று நவலப்பிட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் குறித்த குழு மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கது....



2011உலகக்கிண்ண இறுதிப் போட்டி தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த........... Reviewed by Author on July 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.