அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் தாயக பிரதேசம் எங்கும் - விண்ணை அதிர வைக்கும் தாய்மாரின் கதறல்கள்! இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?

தமிழர் தாயக பிரதேசம் எங்கும் - விண்ணை அதிர வைக்கும் தாய்மாரின் கதறல்கள்! இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?

மட்டக்களப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி பொலிஸாரின் தடையினையும் உடைத்து மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன்போது, நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்துக் காட்டிய பொலிஸார் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.

இங்கு கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணியை கைதுசெய்யும் முயற்சியை அங்குவந்திருந்த மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் என்று கூறி தமது போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை அழித்ததாக மகிந்தராஜபகஷ கூறியுள்ள நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட கிழவிகள் சேர்ந்தா விடுதலைப் புலிகளை மீள அமைக்கப்போகின்றோம் என்று பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணி தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் 

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற பேரணியை அடுத்து வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினாரால் மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாடத்தில் கலதுகொண்டவர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? சர்வதேச விசாரணை வேண்டும். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? என கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டனர்.



முல்லைத்தீவு
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்று காலை முல்லைத்தீவிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




தமிழர் தாயக பிரதேசம் எங்கும் - விண்ணை அதிர வைக்கும் தாய்மாரின் கதறல்கள்! இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? Reviewed by Author on August 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.