மன்னார் மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் தொடர்பில் உத்தியோக பூர்மாக வெளியிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்
பாராளுமன்ற தேர்தலின் மன்னார் மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக் கொண்ட
வாக்குகள் தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்,தேர்தல்
தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோன்றாஸ் உத்தியோக பூர்வமாக வெளியிட்டார்.
-மன்னார்
புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட வாக்கு
எண்ணும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை(6) மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற
ஊடக சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-இன்று
வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய
பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட வாக்கு எண்ணும் நிலையத்தில் வாக்கு
எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
-மொத்தமாக 15 வாக்கு எண்ணு`ம் நிலையங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அரம்பிக்கப்பட்டது.
-முதலில் வாக்கு பெட்டிகளுக்கான வாக்கு எண்ணலும்,பின்னர் கட்சிகளுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம் பெற்றது.
-மாலை 3 மணியளவில் கட்சிகளுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம் பெற்றது.
-மொத்தமாக 62 ஆயிரத்து 675 வாக்குகளில் 4 ஆயிரத்து 24 வாக்குகள் நிறாகரிக்கப்பட்டுள்ளது.
-மிகுதி
58 ஆயிரத்து 652 வாக்குகளில் இலங்கை தமிழரசுக் கட்சி 20 ஆயிரத்து 266
வாக்ககளும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14 ஆயிரத்து 632
வாக்குகளையும்,சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 12 ஆயிரத்து 50
வாக்குகளையும்,சுயேட்சைக்குழு- 01 2 ஆயிரத்து 565 வாக்குகளையும்,தமிழ்
மக்கள் தேசிய கூட்டணி 1288 வாக்குகளையும்,சமூக மக்கள் ஜனநாயக கட்சி 1304
வாக்குகளும்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி 2 ஆயிரத்து 86 வாக்குகளும்,ஏனையவை
குறைந்தவையாக உள்ளது.
வாக்களிக்கப்பட்ட
வாக்குகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு தெரிவுகள் இடம்
பெற்று வருகின்றது.பின்னர் மாவட்ட ரீதியாக வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்
அறிவிக்கப்படும்.
குறித்த வாக்கு விபரங்கள் வன்னி
தேர்தல் மாவட்டமான வவுனியாவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி
வைத்துள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்...
மன்னார் மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் தொடர்பில் உத்தியோக பூர்மாக வெளியிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்
Reviewed by Author
on
August 06, 2020
Rating:
No comments:
Post a Comment