அண்மைய செய்திகள்

recent
-

இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ள நாட்டின் புதிய பிரதமர்....

நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ   அலரி மாளிகையில் இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

இதேவேளை சுபீட்சத்தின் நோக்கு விஞ்ஞானபத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் கட்சி
வேறுபாடுகளுக்கு அப்பால் சகல இலங்கையர்களையும் சென்றடையும் வகையில் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை வழங்கிய குருணாகல் மாவட்ட மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது...

 

இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ள நாட்டின் புதிய பிரதமர்.... Reviewed by Author on August 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.