-சமாதானத்தையும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் விசேட கருத்தமர்வு.
-சமாதானத்தையும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் விசேட கருத்தமர்வு.
(மன்னார் நிருபர்)
(02-09-2020)
-மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,அதன் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளார் தலைமையில் இளைஞர் யுவதிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து சமாதானத்தையும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விசேட கருத்தமர்வு இன்று புதன் கிழமை(2) காலை மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தில் இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் முக்கியமாக இலக்கு கிராமங்களில் எதிர் கொள்கின்ற சவால்களை கண்டறிந்து அவற்றை கிராம மட்டத்தில் காணப்படுகின்ற அமைப்புகளின் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தலும், அவற்றை தீர்ப்பதற்கான வழி முறைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கருத்தமர்வின் வளவாளராக அறிவழகன் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
இதன் போது தலைமைத்துவத்தை கொண்டு செல்வதற்கு எவ்வாறான பண்புகள் காணப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து பிராந்திய மட்டத்தில் செயற்திட்டங்களை அமுல் படுத்துவதற்கு இளைஞர் யுவதிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து பிராந்திய மட்ட குழு உருவாக்கப்பட்டு இவர்களை வலுப்படுத்துவதற்கான குழு செயற்பாடுகள் இடம் பெற்றது.
,
-சமாதானத்தையும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் விசேட கருத்தமர்வு.
Reviewed by Author
on
September 02, 2020
Rating:
No comments:
Post a Comment