அண்மைய செய்திகள்

recent
-

தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி!

தியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நினைவு கூரல் நிகழ்வு, பல்கலைகழக வளாகத்திலுள்ள பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக நடைபெற்றதுடன், மாணவர்கள் அனைவரும் முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு பொலிஸார் தடை விதித்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகம் உட்பட முக்கிய இடங்களில் நினைவுகூரப்படுவதைத் தடுக்க பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 இந்நிலையில், நேற்று யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் கூடியிருந்த நிலையில், பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், மேலதிகமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பல்கலைக்கழக சூழலில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில், இன்று யாழ்.பல்கலை மாணவர்களால் நினைகூரல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது

.
தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி! Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.