அண்மைய செய்திகள்

recent
-

ஒரு கோடி பெறுமதியான கஞ்சா மன்னாரில் மீட்பு

மன்னார் மடு பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட குஞ்சுகுளம் பொலிஸ்,இரானுவ சோதனை சாவடியில் கூலர் வாகனம் ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட 103 கிலோ கேரள கஞ்சா நேற்று இரவு 10 மணியளவில் மடு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஸ தலைமையிலான பொலிஸ் பிரிவினரே மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு சென்ற வாகனம் மற்றும் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்

 மேற்படி கைது செய்யப்பட்ட இரு நபர்களும் எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36மற்றும் 39 வயதுடைய நபர்கள் ஆவர் மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் வாகனம் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளது இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி என







கணிப்பிடப்பட்டுள்ளது
ஒரு கோடி பெறுமதியான கஞ்சா மன்னாரில் மீட்பு Reviewed by Author on September 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.