அண்மைய செய்திகள்

recent
-

சற்றுமுன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு! கடும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தும் எதிர்க்கட்சி

ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் சற்று முன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. 

 இதனையடுத்து, திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய அமர்விற்கு 20 ஆவது அரசியலமைப்பை எதிக்கும் வகையில், 20 வேண்டாம் எள் சுலோகத்தை அணிந்து வந்துள்ளனர். 

 நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியினால் இந்த சட்டமூலம் இன்றைய தினம் முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு! கடும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தும் எதிர்க்கட்சி Reviewed by Author on September 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.