அண்மைய செய்திகள்

recent
-

பகிடிவதையை தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்!

புதுமுக மாணவர்கள் வரும் போது இம்சைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் இம்சைப்படுத்தல்கள் நடந்தன. கோவிட் - 19 க்குப் பிறகு விரிவுரைகளும் நிகழ்நிலை (online) யில் நடக்கின்றன.

 இம்சைப்படுத்தலும் (ராகிங்) நிகழ்நிலையில் நடக்கின்றது. நான் மாணவனாக இருந்த காலப்பகுதியிலும் இம்சைப்படுத்தல் இருந்தது. பேராசிரியர் வித்தியானந்தன் துணைவேந்தராக இருந்த வேளையில் இடம்பெற்ற ஒரு கைகலப்பின் காரணமாக பல்கலைக்கழகம் 3 வாரங்களுக்கு மூடப்பட்டது.வெளியாட்கள் பலர், தாங்களும் சிரேஸ்ட மாணவர்கள் என்று சொல்லிக் கொண்டு இம்சைப்படுத்தலில் ஈடுபட்டதனால் கைகலப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும், அது இடம்பெற்றது. புதிய காலகட்டத்தில் அது கூடும். ஏனென்றல் இணையத் தொழில்நுட்பத்தைப் பாவித்து அதைச் செய்கிறார்கள். பலாலி இராணுவ முகாமில் லெப்டினனட் தர அதிகாரியாக உள்ள உளவியல் பெண் வைத்தியர் ஒருவரின் சகோதரனும் ராகிங் செய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை தெரிவித்தார். சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள். பொது இடத்தில் சொல்ல முடியாதது. சட்டையை கழற்றி உடம்பை காட்டுவது மாத்திரமல்ல. அதற்கு மேலாகவும் கேட்கப்பட்டது. அது கிட்டத்தட்ட "நீலவான நிகழ்வுகளை" எல்லாம் முழுக்க பார்ப்பதை போல.

 உனது அக்கா பலாலியில் இராணுவத்தில் இருக்கிறார்தானே என்றும் ராகிங்கில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தனியே மன எழுச்சியால் நடப்பதல்ல. அதற்கு அப்பால் அரசியல் பின்னணியுள்ளவை. ஏற்கனவே பல்கலகழகத்தில் நடந்த மோதல் ஒன்றில், அரசியல் பின்னணியை நான் சுட்டிக்காட்டினேன். பல்கலைக்கழகத்திற்கு வரும் கிராமப்புற மாணவர்கள் அரசியல் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளனர்.

 பகிடிவதையை தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் இந்த சம்பவம் நடந்தால், பீடாதிபதி எமக்கு அறிவிப்பார். சிரேஷ்ட மாணவ ஆலோசகர், பிரதி சட்ட ஒழுக்காற்று அதிகாரி ஆகியோர் பீடாதிபதியுடன் இணைந்து அந்த விடயம் தொடர்பான ஆரம்ப அறிக்கையை 2 நாட்களிற்குள் வழங்க வேண்டும். அதனடிப்படையில் குற்றப்பத்திரிகை வழங்குவோம். அவ்ர்கள் குற்றத்தின் அடிப்படையில் விடுதியிலிருந்தும், வகுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்கள். 

 நாட்களிற்குள் மாணவர்கள் அதற்கு விளக்கமளிக்க வேண்டும். மாணவர் ஒழுக்காற்று சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்த குழு, மாணவனின் விளக்கத்தை ஆராய்ந்து, விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்குவார்கள். சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்பு பட்டங்கள் பெற முடியாது, 4ஆம் வருட கற்கையில் ஈடுபட முடியாது, சிறப்பு தேர்ச்சிகள் வழங்கப்படாது. ஆகக்குறைந்தது ஒரு வருடம் அனைத்து கல்வி நடவடிக்கையில் இருந்தும் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

 வணிக, முகாமைத்துவ பீட பேராசிரிநர் பாலசுந்தரம்பிள்ளை நிமலதாசன் கருத்து தெரிவித்தபோது, நாங்கள் மிக வேகமாக ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளோம். அந்த விசாரணையின் அடிப்படையில் 10 மணித்தியால விசாரணையில் சந்தேகத்திற்குரிய 2ஆம்வருடத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வகுப்பு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிற்கு உதவியதற்காக- விசாரணையை நம்பக தன்மையை ஏற்படுத்த முதலாம் வருட மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

 இந்த இம்சையில் ஈடுபட்டவர்களிற்கு சிறப்பு கற்கை நெறி வழங்கப்படாது, ஒரு வருட வகுப்புத்தடை விதிக்கப்படும். இணைய குற்றம் தொடர்பில் பொலிஸாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

பகிடிவதையை தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்! Reviewed by Author on September 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.