மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர் காலம்' என்ற வேளைத்திட்டம் தொடர்பில் ஆராய்வு.
அதன் அடிப்படையில்,இவ்வருடம் 90 வீடுகள் அமைக்கப்பட உள்ளது.ஒரு வீடு அமைக்க 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்டவுள்ளது. தற்போது 45 வீடுகள் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருவதாகவும் அவற்றில் 15 வீடுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் நோயல் ஜெயச்சந்திரன் தெரிவித்தார். மிகுதி வீடுகளை பூர்த்தி செய்ய தலைமையக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மிகுதி வீடுகளை அமைப்பதற்கான தெரிவுகள் ஒரு வாரத்தில் மேற்கொள்ள முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கூட்டத்தின் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பதில் அரசாங்க அதிபர் தலைமையில் தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விடையம் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக அறிவித்தல்கள் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு 49 பயணாளிகள் தெரிவு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
-குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள், மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.
.
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர் காலம்' என்ற வேளைத்திட்டம் தொடர்பில் ஆராய்வு.
Reviewed by Author
on
October 20, 2020
Rating:
No comments:
Post a Comment