ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு என்னும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக 42 பேருக்கு நியமனம் வழங்கி வைப்பு.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களினால் குறித்த நியமனக்கடிதம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக முதல் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் நேர்முக தேர்விற்கு தோற்றிய நிலையில் முதல் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 42 இளைஞர் யுவதிகளுக்கான நியமன கடிதங்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளிவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு என்னும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 42 பயனாளிகளும் மிகவும் வறுமை கோட்டிற்கு உற்பட்டவர்கள்; என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு என்னும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக 42 பேருக்கு நியமனம் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
October 23, 2020
Rating:
No comments:
Post a Comment