அண்மைய செய்திகள்

recent
-

வாழைச்சேனையில் தனிமையை மீறினால் கடும் நடவடிக்கை!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உயர்மட்ட மாநாடு இன்று (26) சற்றுமுன் இடம்பெற்றது. குறித்த உயர்மட்ட கூட்டத்தின் போது, “வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தலிலுள்ள வீடுகளுக்கு வெளியில் பூட்டு போட்டு வைத்தல், வெளியில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்புதல், மரண வீடுகளில் நல்லடக்கத்தில் 15 பேர் மாத்திரம் கலந்து கொள்ளல், திருமணங்களை மறு அறிவித்தல் வரை பிற்போடல், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் ஐந்து பேர் கொண்ட குழு நியமித்து கண்கானிப்பில் ஈடுபடல்.

 பிரதேச சபையால் பெறப்படும் குப்பைகள் பைகளில் இடப்பட்டு வீதியோரமாக வைத்து விடல், கொரோனா தொற்று தொடர்பான கண்காணிப்பு தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து நியமிக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுத்தல்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்தோடு கொரோனா தொற்றுள்ளவர்களுடன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமைகள் இன்னும் மோசமடையும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டோர் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வாழைச்சேனையில் தனிமையை மீறினால் கடும் நடவடிக்கை! Reviewed by Author on October 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.