மன்னார் தள்ளாடி சந்தியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்.
குறித்த நபர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிலில் வந்து கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனத்துடன் தள்ளாடி சந்தியில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் வீதிபோக்கு வரத்து பிரிவு பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் தள்ளாடி சந்தியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்.
Reviewed by Author
on
November 13, 2020
Rating:
No comments:
Post a Comment