அண்மைய செய்திகள்

recent
-

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு

வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய ஆயுர்வேத முறைகளுக்கு அமைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்உணவு வகைகள் தயாரித்தல் மற்றும் கொரோனா வைரஸ்(கொவிட்-19) இல்லாதொழிக்கும் பொருட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத பானம் வழங்கி வைக்கும் நிகழ்வு மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் ரஞ்சனா நவரத்தினம் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம்(10) மு.ப10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

 இக் கருத்தமர்வின் வளவாளராக பாண்டியன்குளம் ஆயுள்வேத வைத்தியர் கலந்து கொண்டு பிரதேச செயலக அலுவலகர்களுக்கு குறித்த விடயம் தொடர்பாக விளக்கமளித்தார். கருத்தமர்வின் நிறைவில் பங்குபற்றியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்"சுவ பரணி" நோய் எதிர்ப்பு ஆயுர்வேத மூலிகை மருந்து வைத்தியரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலமர்வானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு Reviewed by Author on November 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.