ரிசாட் பதியுதீன் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு ! மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
குறித்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்துவதாக நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையிலேயே ரிஷாட் பதியுதீனின் விவகாரத்தை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம், மனு கோரிக்கையை நிராகரித்ததுடன், எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில்,புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பேருந்துகள் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிசாட் பதியுதீன் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு ! மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Author
on
November 13, 2020
Rating:
No comments:
Post a Comment