அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் “ வரப்புயர மரம் நடுகைத் திட்டம்”

 இன்று காலை 10.00 மணிக்கு சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவச்தமிழ் சங்கம் - சுவீஸ் இன் நிதி அனுசரணையில் “ வரப்புயர மரம் நடுகைத் திட்டம்” மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு 100 நல்லின மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 நிகழ்வினை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த உயர்திரு செ. கேதீஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைக்க அதன் தொடர் நிகழ்வாக இன்று மன்/ அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை சூழலில் கல்லூரி முதல்வர், பிரதி முதல்வர் ஜெயரூபன் பாடசாலை ஆசிரியர்கள், அருட்சகோதரி, மாணவர்கள் மன்னார் மாவட்டசெயலக முதியோர்மேம்பாட்டு உத்தியோகத்தர் செந்தில்குமரன்,மாவட்ட புனர்வாழ்வு உத்தியோகத்தர் சுதாகரன் கஜி தளபாட உரிமையாளர் ஜீவகுமார் அவர்களின் பிரசன்னத்தில் மா மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதற்கான முழுமையான ஒழுங்கமைப்பினை செய்து தந்த பல்கலைக்கழக மாணவன் பொன்மலர்ச்செல்வன் கோகிலன் அவர்களுக்கு ஏற்பாட்டு குழு சார்பான நன்றிகள்.





மன்னார் மாவட்டத்தில் “ வரப்புயர மரம் நடுகைத் திட்டம்” Reviewed by Author on November 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.