மன்னாரில் முகக்கவசம் அணியாமல் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸார் சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்க வின் வழி நடத்தலில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி. ஜெயதுங்க அவர்களின் தலைமையில் மன்னார் நகர பகுதியில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோர் , பேரூந்துகளில் பயணங்களை மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் ஏக்கனவே மக்களுக்கு பல தடவைகள் பொது அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் முகக்கவசம் அணியாமல் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸார் சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு.
Reviewed by Author
on
November 04, 2020
Rating:
No comments:
Post a Comment