அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நகரசபை தயார் நிலையில் – அவசர இலக்கத்தினை வெளியிட்ட நகரசபை தலைவர்

புயலினால் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நகரசபை ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் தலைவர் இ. கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ‘புரவி புயலானது வவுனியாவிலும் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் நகரசபை அவசர கால செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராக உள்ளது.

 தீயணைப்பு பிரிவு, நோயாளர் காவு வண்டி, நகரசபை தொழிலாளர்கள் என அனைத்து பிரிவும் தயார் நிலையில் உள்ளன. மக்கள் தமது பகுதிகளில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் விசேட இலக்கமான 024-2225555 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை தயார் நிலையில் – அவசர இலக்கத்தினை வெளியிட்ட நகரசபை தலைவர் Reviewed by Author on December 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.