அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் இளைஞனுக்கு கொரோனா!

கிளிநொச்சியில் 20 வயதுடைய இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (06) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மேல் மாகாணத்துக்குச் சென்று தண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தோரால் ஏற்பட்ட தாெற்றுடன் தொடர்புடைய இளைஞனுக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் கிளிநொச்சியில் தண்ணீர் போத்தல் விநியோக நிறுவனத்துக்கு அண்மையாக இயங்கும் அந்தியகால சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த 14 நாள்களாக குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இளைஞனுக்கு முதன்முறை நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகவில்லை. இந்நிலையில் 14 நாள்கள் நிறைவில் மீளவும் மாதிரிகள் பெறப்பட்டு இன்று நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இளைஞனுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இளைஞனுக்கு கொரோனா! Reviewed by Author on December 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.