அண்மைய செய்திகள்

recent
-

கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் பெரியார்கள் பெயர்களை சூட்டி அசத்திய. விதானையார்!

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள், தமிழ் பெரியார்களின் பெயர்களை வைத்து அசத்தியுள்ளார் "கிராம சேவையாளர் - ஸ்ரீதரன்" இதுவரை முதலாம் ஒழுங்கை தொடக்கம் 12 ம் ஒழுங்கை வரை அழைக்கப்பட்ட வீதிகள் அவற்றின் ஒழுங்கைகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் என பல்வேறு பெயர்களை ஸ்ரீதரன் முன்மொழிந்தார். 

 அது அக்கிரம மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வீதிகளுக்கான பெயர் பின்வருமாறு. 
முதலாம் ஒழுங்கை ( இடது):- #இளங்கோ வீதி 
முதலாம் ஒழுங்கை ( வலது) :-#சுப்பிரமணியம் வீதி 
2ம் ஒழுங்கை:- #புணித_சின்னப்பர் வீதி 
2ம் ஒழுங்ஙை 1ம் குறுக்கு தெரு :- #நாச்சியார் வீதி 
2ம் ஒழுங்கை 2ம் குருக்கு தெரு :- #கபிலர் வீதி 
3ம் ஒழுங்கை:- #கபிலர் வீதி 
4ம் ஒழுங்கை :-#விவேகானந்தர் வீதி 
4ம் ஒழுங்கை 1ம் குருக்கு தெரு :- #மாருதி வீதி 
4ம் ஒழுங்கை 2ம் குருக்கு தெரு :- #கரிகாலன் வீதி 
5ம் ஒழுங்கை :- #கம்பர் வீதி 
6ம் ஒழுங்கை :- #கருமாரி_அம்மன்_கோவில் வீதி 
7ம் ஒழுங்கை :- #தனிநாயகம் வீதி 
8ம் ஒழுங்கை :-#எல்லாளன் வீதி 
8ம் ஒழுங்கை 1ம் குருக்கு தெரு :- #அருணாசலம் வீதி 
9ம் ஒழுங்கை :- #பாண்டியன் வீதி 
10 ம் ஒழுங்கை :- #சேக்கிழார் வீதி 
11ம் ஒழுங்கை :- #பாரதி வீதி 
புதிய வீட்டுத்திட்ட ஒழுங்கை:- #விபுலானந்தர் வீதி 
40 வீட்டுத்திட்ட வீதி :- #சேரன் சுற்றுவட்ட வீதி 
சேவலங்கா வீதி :- #காந்தி வீதி 

அத்துடன் இவ்வீதிகளுக்கு இப்பெயர் பலகைகளை நிர்மாணிக்கவும் மக்களின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுள்ளதுடன் மக்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். 

#செயல்திறன் மிக்க கிராம சேவையாளர்கள் உருவாக்குகின்ற பொழுது எவ்வாறான மாற்றங்கள் நிகழும் என்பதை ஸ்ரீதரன் அனைவருக்கும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் பெரியார்கள் பெயர்களை சூட்டி அசத்திய. விதானையார்! Reviewed by Author on March 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.