மஸ்கெலியாவில் நெடுங்குடியிருப்பில் பாரிய தீ விபத்து: 20 வீடுகள் தீக்கிரை!
இந்த விபத்தில், உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும் பெருமளவில் வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட பாடசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், மக்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மஸ்கெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த தீ விபத்து தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹற்றன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியாவில் நெடுங்குடியிருப்பில் பாரிய தீ விபத்து: 20 வீடுகள் தீக்கிரை!
Reviewed by Author
on
March 17, 2021
Rating:
No comments:
Post a Comment