சுகாதார விதிகளை மீறுவோரை கண்டறிய சிவில் உடையில் பொலிஸார் கடமையில்
வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளை பொதுமக்கள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசத்தை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சுகாதார அதிகாரிகளின் அனுமதி இன்றி பொது மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்தக்கூடாது.
நேற்றைய தினத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 134 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டனர். கொழும்பு நகரத்தில் 34 பேரும், கம்பஹா பிரதேசத்தில் 45 பேரும், களுத்துறை பிரதேசத்தில் 50 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
2020 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் ஒரு நாளில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் ஆக கூடுதலானோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 3647 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார விதிகளை மீறுவோரை கண்டறிய சிவில் உடையில் பொலிஸார் கடமையில்
Reviewed by Author
on
April 26, 2021
Rating:
No comments:
Post a Comment