அண்மைய செய்திகள்

recent
-

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

 குறித்த ஊடக சந்திப்பில் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதிகளை ஆரம்பிக்கும் விடயத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. ஆகையினால் 3, 4 ஆம் வருட மாணவர்களை மட்டும் விடுதிக்குள் உள்வாங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர் Reviewed by Author on April 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.