மன்னார் காட்டாஸ்பத்திரி பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி, மற்றும் பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்களான சோமயித், இந்திக்க, உப பொலிஸ் பரிசோதகர்களான விவேகாணந், ஆனந்த ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதியையும், அதனை தன் வசம் வைத்திருந்த காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு,கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதி மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் காட்டாஸ்பத்திரி பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது.
Reviewed by Author
on
May 21, 2021
Rating:
No comments:
Post a Comment