அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடந்த 24 தினங்களில் 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 23 கொரோன தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். -மன்னாரில் இன்று திங்கட்கிழமை (24) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களாகவும்,சிறைச்சாலை உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றனர். 

 இவர்களுடன் சேர்த்த இந்த மாதம் 82 கொரோனா தொற்றாளர்களும், தற்போ வரை மொத்தமாக 442 நபர்களும்,இந்த வருடம் மாத்திரம் 425 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் தற்போது வரை 2 ஆயிரத்து 72 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 412 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் தாரபுரம் துருக்கி சிட்டி பகுதியில் கடந்த வாரம் திநற்து வைக்கப்பட்ட பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 இவர்கள் மன்னார், வவுனியா மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த வார இறுதியில் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து கொண்டு வீடு செல்ல உள்ளனர். நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(25) பயணக்கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்படாமல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் தேவை இன்றி வீடுகளில் இருந்து வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம். அவ்வாறு அதியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வரும் போது வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் வருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னாரில் கடந்த 24 தினங்களில் 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் Reviewed by Author on May 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.