அண்மைய செய்திகள்

recent
-

வடகிழக்கு பகுதியின் முதல் அதி நவீன தனியார் சீருடை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து வைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி முதல் முறையாக அமைக்கப்பட்ட அதி நவீன சீருடை தயாரிப்பு நிறுவனம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மன்னார் மூர் வீதி நெடுங்குளம் பகுதியில் AA Sports நிறுவனத்தின் பணிப்பாளர் திரு அமல்ரஜனால் உருவாக்கப்பட்ட குறித்த நிறுவனம் நிறுவன ரீதியான ஆடைகள் விளையாட்டு துறை சார்ந்த ஆடைகளை தயாரிப்பதுடன் அச்சு தொழில் நுட்பம் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபடும் என்பதுடன் இலங்கை முழுவதற்குமான சந்தைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

 குறித்த நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸார்ன்லி டிமேல் மன்னார் பொது பொலிஸ் பரிசோதகர் பண்டுல வீர சிங்க பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோரலாத லிங்கம் வடமாகாணத்திற்கான விளையாட்டு துறை அமைப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு வைபவரீதியாக நிறுவன செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர்.
























வடகிழக்கு பகுதியின் முதல் அதி நவீன தனியார் சீருடை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து வைப்பு Reviewed by Author on May 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.