அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

நாளை (21) அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, கழுத்துறை, அம்பாறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு Reviewed by Author on June 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.