அண்மைய செய்திகள்

recent
-

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) மாலை கித்துள் வயல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 53 வயதுடைய பொண்ணுத்துறை கௌகிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 06 மணியளவில் வீட்டிலிருந்து இருந்து வயல் காவலுக்காக கித்துள் வயல்பகுதிக்கு சென்ற வேளையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இன்று காலை மீட்கப்பட்ட சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். பயணத்தடை காரணமாக மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழும் விவசாயிகள் யானைகளின் தாக்குதல்கள் காரணமாகவும் பாதிக்கப்படுவது தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளர். இப்பகுதியில் யானையின் தாக்குதல்கள் காரணமாக தொடர்ச்சியான இழப்புகளை பொதுமக்கள் எதிர்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி Reviewed by Author on June 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.