அண்மைய செய்திகள்

recent
-

வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்க

உடல்நலக்குறைவால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள், தமக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேற முடியாதோருக்கு விரைவில் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி நேற்று (16) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இதற்கமைய, இந்த விசேட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

 வயோதிபர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை எனின், அவர்களுக்காக ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, நடமாடும் சேவைகளூடாக அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்க Reviewed by Author on July 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.