ஹிசாலினிக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
பறை மேளம் அடித்து உயிரிழந்த சிறுமிக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் தமிழ்-முஸ்லிம் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறுமியின் படுகொலைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
வீட்டு வேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், ஹிசாலினிக்கு நீதிவேண்டும், வீட்டு வேலையும் தொழில்தான் சட்டம்வேண்டும், நான் வேலைக்காரி இல்லை தொழிலாளி போன்ற கோசங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
ஒரு அமைச்சராக இருந்தவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு அமர்த்தியது சட்ட மீறல் எனவும் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஹிசாலினிக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
July 21, 2021
Rating:
No comments:
Post a Comment